×

ஊழியர் வேலை நேரத்தை உயர்த்தும் மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஊழியர்கள் வேலை நேரத்தை உயர்த்தும் மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலில் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லக்கூடிய பயண நேரமே நான்கு மணி நேரம் ஆகிவிடுகிறது. மீதி இருக்கின்ற எட்டு மணி நேரத்தில் தொழிலாளர்கள் எப்படி ஓய்வு எடுக்க முடியும்; குடும்பத்தை எப்படி கவனிக்க முடியும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் ‘முதலீடு’ என்பதன் அடிப்படையில் தொழிலாளர் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமுன்வடிவை நிறைவேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய சட்டமுன்வடிவை உடனே திரும்பப் பெற உரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

The post ஊழியர் வேலை நேரத்தை உயர்த்தும் மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,CHENNAI ,O. Panneer ,Dinakaran ,
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு